Wednesday, May 6, 2009

பசங்க -திரைப்படம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பசங்க என்ற திரைப்படம் கண்டு களித்தேன் .படத்தில் ஹீரோக்கள் இல்லை .தேவைஇல்லாத சண்டைக்காட்சிகள் இல்லை.கர்சிக்கும் வசனம் இல்லை.ஆபாசம் இல்லை: ஆரவாரம் இல்லை.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் ஓரளவு தங்கள் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.இது போன்ற திரைப்படங்களை நாம் கண்டிப்பாக வரவேற்க வேண்டும்.அப்படி வரவேற்க தவறினால் மீண்டும் பல நடிப்பு திலகங்களும் மக்கள் திலகங்களும் இங்கு உருவாகி விடுவார்கள்.அதனை தவிர்க்க வேண்டுமென்றால் நாம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை ஊக்குவிக்கவேண்டும்.

Sunday, April 26, 2009

மூதுரை

நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்உழகில்
நல்லார் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெயுமாம் மழை .

கருத்து:
ஒரு விவசாயி தன் வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுகிறான்.அவ்வாறு இறைத்த நீர் வாய்க்கால் வழியே ஓடி நெற்பயிர் உள்ள வயளை சென்றடைகிறது.அங்கே வாய்க்காலில் முளைத்திருக்கும் புல்லுக்கும் அந்த நீர் பயன்படும்.அதுபோல இவ்வுலகில் நன்மக்கள் இருக்கின்ற காரணத்தினால் பெய்யும் மழையானது அங்கே வாழ்கின்ற கீழ்மக்களுக்கும் பயனை கொடுக்கும்.
உவமை: நெல்பயிர் - நன்மக்கள்
புல் - கீழ்மக்கள்